pdf அஞ்சாத இளவரசன் (Fearless Prince)
13 downloads

இந்தியாவின் பண்டைய வேத நூல்களிலிருந்து நாம் அறியும் இளவரசர் பிரஹ்லாதனின் புகழ்பெற்ற காவியம் இது. நீண்ட காலத்திற்கு முன்பு, ஹிரண்யகசிபு என்ற தீய மன்னன் அரக்கக் குணத்துடன் முழு பிரபஞ்சத்தையும் தனது கட்டுப்பாட்டில் கொண்டு வந்தான்.
ஆனால் அவனது மகன் பிரஹ்லாதன், குழந்தையாக வயிற்றில் இருக்கும்போதே நாரத முனிவரிடம் உபதேசம் கேட்டதால் எப்போதும் பகவானை தியானிப்பதில் மூழ்கியிருந்தான். எந்த தொந்தரவும் மற்றவர்களுக்கு கொடுக்காமல் குறிப்பாக மிகச் சிறந்த விஷ்ணு (கிருஷ்ண) பக்தனாக வாழ்ந்து வந்தான். ஆன்மீக வாழ்க்கை மீதான சிறுவனின் இயல்பான விருப்பத்தைக் கண்டு, தன் சொந்த மகன் பிரஹ்லாதனை ஒரு பரம எதிரியாகக் கருதி, தந்தை ஹிரண்ய-கசிபு எத்தனையோ விதமாக பிரஹ்லாதனைக் கொல்ல முயன்றான். ஆனால் அவனது அத்தனை முயற்சிகளும் தோல்வியடைந்தன.
மேலும் இந்த புத்தகத்தில் ஶ்ரீநரசிம்ம தேவரின் அவதாரத்தையும் விரிவாக படிக்கிறோம். பிரஹ்லாத் மகாராஜாவின் போதனைகளைப் பின்பற்றினால், நாமும் இறைவனின் அச்சமற்ற தூய பக்தர்களாக மாறுவோம்.




