pdf வைகுண்டத்திற்கும் அப்பால் (Going Beyond Vaikuntha)
17 downloads
இந்த சிறு புத்தகம் ஸ்ரீல சனாதன கோஸ்வாமிபாதரின் ஸ்ரீ பிரஹத்-பாகவதாமிருதம் என்ற நூலுக்கு ஸ்ரீல பக்திவேதாந்த நாராயண கோஸ்வாமி மகாராஜா வழங்கிய மாசற்ற விளக்கவுரைகளையும் சொற்பொழிவுகளையும் உள்ளடக்கியது.
சிரமப்பட்டு ஸ்ரீ வைகுந்த தாமத்தை அடைந்த கோபகுமார் அங்கு எவ்வாறு மனச்சோர்வடைந்து, தனது சொந்த அதிருப்திக்கான காரணத்தைக் கூட அறிய முடியாமல் தவித்தார். அவரது சித்த ரூபத்துக்கு வைகுந்தம் உகந்தது அல்ல என்பதை அவர் தெரியாமல் ஶ்ரீவைகுந்த லோகத்தில் மிகவும் வாடினார். அந்த நேரத்தில் ஸ்ரீ நாரத ரிஷி அவரை அணுகி, கோபகுமாருக்கு சிக்ஷ-குருவாக (ஆன்மீக குருவாக) மாறி, கோபகுமாரரின் ஆன்மீக பயணத்தை முடிக்கத் தேவையான அறிவுரைகளையும் தத்துவங்களையும் அவருக்கு அளிக்கிறார்.
பின்னர் கோபகுமார் படிப்படையாக ஶ்ரீராம, ஶ்ரீதுவாரக மற்றும் மதுரா தாமங்களுக்கும் சென்று கடைசியில் கோலோக தாமத்தை அடைகிறார். எங்கே தன் இஷ்ட பிரியமான ஶ்ரீகிருஷ்ணர் மாடு மேய்ப்பதை கண்டு ஓடி அவரை தழுவுகிறார். இவ்வாறு தன் சித்த ரூபத்துக்கு உகந்த கோலோகத்தை அடைந்து அங்கே அவர் நிரந்தரமாக மகிழ்ச்சியாக வாழ்கிறார்.




